கும்பகோணத்தில் குப்பைகளைத் தரம் பிரிப்பது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார் கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வாங்குவதற்கான சிறப்பு முகாமுக்குத் தலைமை வகித்த அவர் பேசியது:
குப்பைகளைத் தரம் பிரித்து எடுப்பது குறித்து கும்பகோணம் பகுதி பொதுமக்களிடம் நகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த விழிப்புணர்வு பெண்களிடம் சென்றடைவதன் மூலம், வீடுகளிலேயே குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன.
எனவே, இந்த நிகழ்ச்சிக்குப் பெண்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை, அதன் பயன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பிரித்து கொடுக்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை இயற்கை உரமாக மாற்றப்பட்டு விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மக்காத குப்பையைத் தனித் தனியாகப் பிரித்து மறு சுழற்சிக்குப் பயன்படுகிறது. இதன்மூலம் குப்பைகளும் பயனுள்ள குப்பைகளாக மாற்றப்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டம் நூறு சதவிகிதம் வெற்றி பெறும். இதைக் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் கையில்தான் உள்ளது என்றார் ஆணையர்.இதில் நகர்நல அலுவலர் பிரேமா, வருவாய் ஆய்வாளர் டேவிட் பாஸ்கர்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

