மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

நிபந்தனையின்றி நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, உள்ளூர் விவசாயிகளின்

Updated On :23 ஜனவரி 2019, 7:54 am IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, உள்ளூர் விவசாயிகளின் நெல்லை  நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலர் மு.அ. பாரதி தெரிவித்திருப்பது: காவிரி டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, நெல்லை கொள்முதல் செய்து வருவது கடந்த கால வழக்கம். தற்போது சில இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்முதல் நிலையங்களிலும் பணியாளர்கள் மற்றும் சாக்கு, சணல் பற்றாக்குறை காரணமாக கொள்முதல் பணி முறையாக நடைபெறவில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் பணி முறையாகவும், சரியாகவும் நடக்காததால் உற்பத்தி செய்த நெல்லை உள்ளூர் விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 
மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள், உள்ளூர் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம்,  தூசி,  கருக்காய் உள்ளது போன்ற பல காரணங்களைக் கூறி கொள்முதல் செய்ய மறுத்து வருகின்றனர்,
பிற மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகளின் நெல்லையும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நெல்லையும் எவ்வித நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்து வருகின்றனர்.  இதனால், உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை விற்க முடியாமல், குறைந்த விலைக்கு வெளி சந்தையில் வியாபாரிகளிடம் விற்கின்றனர். சம்பா சாகுபடி செய்ய காவிரியில் போதிய தண்ணீரைத் தமிழக அரசுப் பெற்றுத்தர முடியாத நிலையில், பல்வேறு தடைகளைத் தாண்டி காவிரி பாசனப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்துள்ள சம்பா நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.