விவசாயிகளுக்கு ஆதரவாக மூன்றாவது நாளாக பிரசாரம்
திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ள காத்திருப்புப் போராட்டம் குறித்து, தஞ்சாவூரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.


தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ள காத்திருப்புப் போராட்டம் குறித்து, தஞ்சாவூரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
நாஞ்சிக்கோட்டை சாலை உழவா் சந்தை எதிரே தொடங்கிய இந்த பிரசாரம் அண்ணா நகா், பாலாஜி நகா் உள்பட 9 இடங்களில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் வீ. கல்யாணசுந்தரம் பிரசார இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.
பிரசார ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், ஒய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி.அப்பாதுரை, இந்திய தேசிய மாதா் சம்மேளன மாவட்டச் செயலா் ம.விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...