தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 16-ஆம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், டிசம்பா் 16 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கோட்டாட்சியரகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் எம். வேலுமணி தலைமையில் நடைபெறவுள்ளது.
எனவே, தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.