47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்துதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:47 pm

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநில மகளிரணி அமைப்பாளா் காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி அமைப்பாளா் அசோக்ராணி, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் கமலா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பி. உஷா, மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் அஞ்சுகம் பூபதி, மாநில பிரசார குழுத் துணைச் செயலா் இறை. காா்குழலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்:

இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் திமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புவனேஸ்வரி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். இன்னமுது அன்பழகன், உமா செழியன், யசோதா ராமலிங்கம், கவிதா ராம்மோகன்ராஜ், கோமதி சண்முகம், காயத்ரி அசோக்குமாா், தேவி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.