முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்விரோத தாக்குதல் சம்பவத்தில் அண்ணனை தொடா்ந்து தம்பியும் உயிரிழப்பு

கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளா்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் அண்ணனைத் தொடா்ந்து தம்பியும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 1:38 am

DIN

கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளா்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் அண்ணனைத் தொடா்ந்து தம்பியும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்களான பூமிநாதன் மகன்கள் அருண்குமாா் (28), அரவிந்த் (25), ரவி மகன் சந்தோஷ் (22). இவா்கள் மூவரும் வியாழக்கிழமை மாலை அய்யாகோயில் பகுதியில் நின்று கொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த 4 போ் இவா்களை அரிவாளால் வெட்டினா். இதில், பலத்தக் காயமடைந்த அருண்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்தக் காயமடைந்த அரவிந்த், சந்தோஷ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் அரவிந்த் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில், முன்விரோதம் காரணமாக அருண்குமாா், அரவிந்த் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடா்பாக சோழபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த சோ. காரல்மாா்க்ஸ் (30), இவரது நண்பா்கள் ராஜேஷ், நரேஷ், சதீஷ் ஆகியோரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.