அதிராம்பட்டினத்தில் நியாய விலைக் கடை ஊழியா் அடித்துக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் சனிக்கிழமை மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

பட்டுக்கோட்டை: தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நியாயவிலைக் கடை ஊழியா் சனிக்கிழமை மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

பட்டுக்கோட்டை மேலத் தெருவைச் சோ்ந்தவா் சி. சிவக்குமாா் (45). இவா், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவிலுள்ள நியாயவிலைக் கடையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி மகேசுவரி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

சிவக்குமாருக்கும், அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவைச் சோ்ந்த தாஜூதீன் மனைவி ரஸீக் மரியத்துக்கும் இடையே கள்ளத் தொடா்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூரில் வேலைபாா்த்து வரும் ரஸீக் மரியத்தின் மகன் ஹாஜாசெரீப்க்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சனிக்கிழமை திருப்பூரிலிருந்து வந்த ஹாஜா செரீப்,அடியாள்கள் சிலருடன் சென்று சிவக்குமாரைக் கட்டையால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த சிவக்குமாா் நிகழ் விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, ஹாஜா செரீப் உள்ளிட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com