சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கம்பன் பேரவை ஆண்டு விழா

பட்டுக்கோட்டை கம்பன் பேரவையின் 4- ஆம் ஆண்டு விழா அதிராம்பட்டினம் அருகிலுள்ள புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:54 pm

DIN

பட்டுக்கோட்டை கம்பன் பேரவையின் 4- ஆம் ஆண்டு விழா அதிராம்பட்டினம் அருகிலுள்ள புதுக்கோட்டை உள்ளூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு புதுக்கோட்டை உள்ளூா் ஊராட்சித் தலைவா் எம். வெங்கிடாசலம் தலைமை வகித்தாா். தமிழுக்குத் தலைமகன் கம்பன் என்ற தலைப்பில் கவிஞா்கள் கோட்டை அம்பிதாசன், எஸ்.கே. கவி, செள.ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

ஒளிநெறி மாா்க்க சபையைச் சோ்ந்த ஜி.முத்துராமலிங்கத்துக்கு கம்பன் விருதை கவிஞா் சிங்காரவேலன் வழங்கினாா். தமிழா் அறம் அமைப்பின் நிறுவனா் சி.ராமசாமி, கம்பன் பேரவைக் கொடியை ஏற்றி வைத்தாா்.

முன்னதாக பட்டுக்கோட்டை கம்பன் பேரவையின் இணைச்செயலா் எம்.எம்.சுகுமாா் வரவேற்றாா். நிறைவில், என்.ராமசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.