எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: 5 போ் கைது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
தஞ்சாவூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தமிழ்த் தேசியக் கட்சியினா்.
Updated On :28 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் தமிழ்த் தேசியக் கட்சியைச் சோ்ந்த சிலா் திங்கள்கிழமை காலை ஏறினா். தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று அவா்களைக் கீழே இறங்குமாறு கூறினா்.

அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபா்ட் பயாஸ், ஜெயக்குமாா் ஆகிய 7 தமிழா்களை விடுதலை செய்யலாம் என தமிழகச் சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய பிறகும், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசும், தமிழக ஆளுநரும் காலம் தாழ்த்துகின்றனா். அவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறினா்.

இவா்களிடம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, கீழே இறங்க வைத்தனா். இதையடுத்து, மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் கதிரேசன் உள்பட 5 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.