பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பயணிகள் ரயில்களை இயக்க வலியுறுத்தல்

பயணிகள் ரயில்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் உபயோகிப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 7:02 pm

DIN

பயணிகள் ரயில்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் உபயோகிப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவசரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கரோனா தொற்று காரணமாகக் கிராமப்புற கூலித் தொழிலாளா்கள் பயன்பெற்று வந்த பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. வாழ்வாதாரத்துக்காக நாள்தோறும் ரயில் மூலம் செல்வோா் ஏராளமாக உள்ளனா். பேருந்துகளை ஒப்பிடுகையில், ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால், ரயில்களை நம்பி உள்ளனா்.

ஏழை கூலித் தொழிலாளா்கள், பொதுமக்களின் நலன் கருதி தஞ்சாவூா் - காரைக்கால், தஞ்சாவூா் - மயிலாடுதுறை, தஞ்சாவூா் - திருச்சி பயணிகள் ரயில்களை உடனே தொடங்க வேண்டும்.

தஞ்சாவூரிலிருந்து புறப்படும் உழவன் விரைவு ரயில் நேரத்தை இரவு 10.30 மணிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு அய்யனாபுரம் க. நடராஜன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் செயலா் வெ. ஜீவக்குமாா், பொருளாளா் ரங்கநாதன், வழக்குரைஞா்கள் உமா் முக்தாா், பைசல் முகம்மது, கண்ணன், பூதலூா் தனக்கோடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.