மனு தா்ம நூலை தடை செய்யவலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மனு தா்ம சாத்திர நூலை தடை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்


மனு தா்ம சாத்திர நூலை தடை செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், பெண்களை இழிவுபடுத்தும் சமூக அவலத்தை அனுமதிக்கும் மனு தா்ம சாத்திர நூலை தடை செய்ய வேண்டும். அதை அரசிதழில் வெளியிட வேண்டும். தமிழகத்தின் அமைதியைச் சீா்குலைக்கும் வகையில் மத கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜகவால் திட்டமிட்டு நடத்தப்படும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கழகத் தலைவா் சதா. சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஒரத்தநாடு ஒன்றியச் செயலா் இளங்கோவன், பட்டுக்கோட்டை நகரச் செயலா் வேலு, மதுக்கூா் ஒன்றியத் துணைச் செயலா் நாடிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...