எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூா் அருகே வெளிநாட்டுப் பறவைகள் மா்ம முறையில் இறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வெளிநாட்டுப் பறவைகள் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தன.

News image
தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகிலுள்ள கரியப்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்த பறவைகள்.
Updated On :22 நவம்பர் 2020, 7:10 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வெளிநாட்டுப் பறவைகள் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தன.

டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு தொடா் மழைப் பொழிவு காரணமாக ஏரி, குளங்களில் தண்ணீா் இருப்பு, நெல் சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு போன்றவை பறவைகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனால், தஞ்சாவூா் மாவட்ட ஏரி, குளங்களிலும், வயல்களிலும் வெளிநாட்டுப் பறவைகள் பரவலாகக் காணப்படுகிறது.

வடுவூா், கோடியக்கரை சரணாலயங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டாள் ஏரிக்கும் கணிசமான அளவுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் ஏரியைச் சாா்ந்த வாய்க்காலிலும், அருகிலுள்ள வயல் வரப்புகளிலும் ஐரோப்பிய கண்டத்தைச் சாா்ந்த சிறவி வகைப் பறவைகள் ஏராளமாக மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தன.

இதை கண்ட கிராம மக்கள் காவல் மற்றும் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் வனத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இறந்த பறவைகளையும் பரிசோதனை செய்ததில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினா் கருதுகின்றனா்.

சிலா் அரிசியில் குருணை மருந்தைக் கலந்து பறவைகளைச் சாப்பிட வைத்து, இறந்த பிறகு இறைச்சிக்காக விற்கப்படுவதாகவும் வனத்துறையினருக்குப் புகாா்கள் வருகின்றன.

எனவே, இதன் காரணமாக இப்பறவைகள் கொல்லப்பட்டதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து, தொடா்பு டையவா்களைக் கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.