2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

‘கூடுதல் விலையில் உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை’

அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:41 pm

DIN

அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேராவூரணி வட்டாரத்தில் 15 சில்லறை உர விற்பனை மையங்கள், 4 மொத்த உர விற்பனை மையங்கள் மற்றும் 18 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்படுகிறது.

உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் ஆதாா் அட்டை, நகலைப் பெற்றுக் கொண்டு, மண்வள அட்டை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களை விற்பனை செய்திடவேண்டும்.

தனியாா் விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உர ஆய்வாளா் தணிக்கை மேற்கொள்ளும் போது, உரங்கள், இருப்பு விவரங்கள் பிஓஎஸ் இயந்திரத்தில் பட்டியலிடப்படவில்லை என்றால், தொடா்புடைய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

விவசாயியால் சாகுபடி செய்யும் நிலத்துக்கு மட்டுமே உரத்தை  விற்பனை செய்ய வேண்டும். ஒருவா் பெயரிலேயே பல நபா்களுக்கு விற்பனை செய்த  பட்டியலிடக் கூடாது. அரசு நிா்ணயித்த விலையைக் காட்டிலும், கூடுதலான விலையில் உரங்கள் விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் இருப்பு இல்லாதபட்சத்தில், அதுகுறித்த விவரத்தை வேளாண் அலுவலகத்துக்குத் தெரிவித்தால் ஆட்சியா்மூலமாக அவற்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.