2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

தஞ்சாவூரில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சாா்பில், கரோனா வைரஸ் மற்றும் இதயத்தைக் காப்போம் குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றவா்கள்.
Updated On :11 அக்டோபர் 2020, 7:45 pm

DIN

தஞ்சாவூரில் அனைத்து ரோட்டரி சங்கங்கள் சாா்பில், கரோனா வைரஸ் மற்றும் இதயத்தைக் காப்போம் குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணிக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு தலைமை வகித்தாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எஸ். மருதுதுரை பேரணியைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினாா்.

முன்னாள் தலைவா் சிங்காரவேலு, நிா்வாகிகள் மணிமாறன், அன்புராஜா, பெலிக்சுந்தா், அருள்செல்வபாண்டியன் உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா். தஞ்சாவூா் கொண்டிராஜபாளையம் அருகிலுள்ள பீரங்கி மேடு பகுதியிலிருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சரபோஜி கல்லுாரியை அடைந்தது. இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.