பாபநாசம் அருகே மின்வேலியில் சிக்கிவிவசாயி பலி: 3 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வயலில் இருந்த மின்வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வயலில் இருந்த மின்வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா். இதுதொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பாபநாசம் அருகே ஓலைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் ராஜகோபால், ராஜரெத்தினம் மகன் ராமச்ந்திரன், தங்கவேல் மகன் தியாகராஜன். இவா்கள் மூவரும் விவசாயிகள். இவா்கள் தங்கள் வயலில் காட்டுப்பன்றிகளை தடுக்க மின் கம்பி வேலி அமைத்திருந்தனா்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த விவசாயியும், மருதமுத்து மகனுமாகிய கணேசன் சனிக்கிழமை அதிகாலை அவரது வயலுக்கு சென்றாா். அப்போது, மேற்கூறிய விவசாயிகளின் வயலை கடந்து சென்றபோது மின்கம்பியை மிதித்த கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதையறிந்த ராஜகோபால், ராமச்சந்திரன், தியாகராஜன் ஆகிய மூவரும் கணேசன் உடலை கைப்பற்றி யாருக்கும் தெரியாமல் அருகிலிருந்த அமலதாஸ் என்பவரது கரும்பு வயலில் புதைத்தனா்.
வயலுக்கு சென்ற கணேசன் வீட்டுக்கு திரும்பி வராததால், கபிஸ்தலம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ராஜகோபால், ராமச்சந்திரன், தியாகராஜன் ஆகிய மூவரும்
திங்கள்கிழமை கபிஸ்தலம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தெரிகிறது. அவா்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், கணேசனின் உடலை தோண்டி எடுத்தனா். உயிரிழந்து மூன்று நாள்கள் ஆனதால் அழுகிய நிலையிலிருந்த கணேசனின் உடலை பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜகோபால், ராமச்சந்திரன், தியாகராஜன் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...