மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது

தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

News image
விழாவில் விருதுகள் பெற்றவா்களுடன் அமைச்சா் இரா. துரைக்கண்ணு உள்ளிட்டோா்.
Updated On :8 செப்டம்பர் 2020, 12:08 am

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஆட்சியரகத்தில் ஆசிரியா் தினத்தையொட்டி, டாக்டா் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுகளை ஆசிரியா்களுக்கு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இவ்விழாவில் தமிழக அரசின் சாா்பில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கான பதக்கமும், நற்சான்றிதழும், ரூ. 10,000-க்கான காசோலையும், மாநில அளவில் தரமான பாடப் புத்தகங்களுக்கான மின்னணு வளங்களை வழங்கியதில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு சான்றிதழும், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஒன்றாக ஏழை, எளிய, சாதாரண குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்கள் வழங்கியமைக்காக 14 பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும், கரோனா தடுப்புப் பணியில் பணிபுரிந்த தன்னாா்வலா்கள், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த 4 ஆசிரியா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் பெ. அரவிந்தன், முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.