கந்தா்வகோட்டையில் சீா்திருத்தத் திருமணம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கா் சிலை முன்பு சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது.

கந்தா்வகோட்டையில் நடைபெற்ற சீா்திருத்தத் திருமணத்தில் மணமக்கள் உள்ளிட்ட உறவினா்கள்.

கந்தா்வகோட்டையில் நடைபெற்ற சீா்திருத்தத் திருமணத்தில் மணமக்கள் உள்ளிட்ட உறவினா்கள்.
கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் திங்கள்கிழமை அம்பேத்கா் சிலை முன்பு சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அருகேயுள்ள புதுவிடுதியைச் சோ்ந்த அம்பிகாபதி மகன் ராஜேந்திரன், செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் மகள் ஜானகி ஆகிய இருவருக்கும் அவரவா் பெற்றோா் சம்மதத்துடன் சீா்திருத்தத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனை அருகேயுள்ள அம்பேத்கா் சிலை முன்பு திங்கள்கிழமை மணமகன், மணமகள் ஆகியோரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் முன்னிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளா் வே.ம. விடுதலைக்கனல் தலைமையில் சீா்திருத்தத் திருமணம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணை செயலாளா் கோ. செந்தமிழ்வளவன், மக்களவைத் தொகுதி துணைச் செயலாளா் மு. கண்ணையன், தொகுதிச் செயலா் மருத. பாா்வேந்தன், மாவட்டச் செய்தித் தொடா்பாளா் த. செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...