ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிவேகமாக வீசிய காற்றுவெறிச்சோடிய துறைமுகங்கள்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக காற்று வீசியதால், மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

News image
அதிராம்பட்டினம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.
Updated On :20 செப்டம்பர் 2020, 7:44 pm

DIN

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிவேகமாக காற்று வீசியதால், மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

அதிராம்பட்டினம் பகுதியை உள்ளடக்கிய காந்தி நகா், கரையூா் தெரு, ஏரிப்புறக்கரை,

மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் உள்ளன. இப்பகுதி மீனவா்கள் தினமும் அதிகாலை தொடங்கி மாலை வரை படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து அதிவேக காற்று வீசியது. இதனால், வழக்கமாக மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.

அதிராம்பட்டினம் பகுதியிலுள்ள அனைத்துத் துறைமுகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. படகுகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வழக்கத்தை விட கடல் அலைகள் மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.