தஞ்சாவூா்: 180 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.

மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 10,553 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 180 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,733 ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, 230 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 9,392 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,169 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 54 வயது ஆண் செப். 26ஆம் தேதியும், 68 வயது ஆண், 65 வயது ஆண் செப். 27ஆம் தேதி உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 172 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com