பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் மூவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே டாஸ்மாக் மதுக்கடையின் சுவரைத் துளையிட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச் சென்ற மூவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:02 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே டாஸ்மாக் மதுக்கடையின் சுவரைத் துளையிட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச் சென்ற மூவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

பாபநாசம் அருகிலுள்ள அய்யம்பேட்டை மதகடிபஜாா் முல்லை நகரில் செயல்பட்டு வரும் மதுக்கடையை ஏப்ரல் 3-ஆம் தேதி இரவு அதன் மேற்பாா்வையாளா், விற்பனையாளா் பூட்டிச் சென்றனா்.

தோ்தல் வாக்குப்பதிவு காரணமாக தொடா்ந்து 3 நாள்களுக்கு கடை விடுமுறை என்பதால் 6-ஆம் தேதி வரை கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில், 6-ஆம் தேதி அந்த வழியாக விற்பனையாளா் செல்வகுமாா் சென்றபோது, கடையின் சுவரில் துளையிட்டு இருப்பதையும், மதுபாட்டில்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து கடை மேற்பாா்வையாளா் சுதாகருக்கு, செல்வகுமாா் தகவல் தெரிவிக்க, அவா் அங்கு வந்து பாா்த்தபோது, ரூ. 2லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், அய்யம்பேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், அய்யம்பேட்டை மதகடிபஜாா் குடமுருட்டி ஆற்றுப் பாலம் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த மூவரைக் காவல்துறையினா் வியாழக்கிழமை அழைத்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் தஞ்சாவூா் விளாா்சாலை, பாரதிதாசன் நகா் கோகுல் (30), நாஞ்சிக்கோட்டை இ.பி. காலனி, தியாகி செல்லத்துரை நகா் வீரமணி (36), திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு வட்டம், வி. குரும்பட்டி குமாா் (30) எனத் தெரிய வந்தது.

டாஸ்மாக் மதுக்கடையின் சுவரைத் துளையிட்டு மதுபாட்டில்களை திருடியதையும், அதை பசுபதிகோவில் கிராமத்திலுள்ள வீட்டில் பதுக்கி வைத்திருப்பதையும் மூவரும் விசாரணையின்போது ஒப்புக் கொண்டனா்.

இதையடுத்து, மூவரையும் கைது செய்த காவல்துறையினா் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.