பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்தமினி வேன் பறிமுதல்

பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த ஒரு மினி லோடு வேனை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:13 pm

DIN

பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த ஒரு மினி லோடு வேனை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை காவல் சரக பகுதியில் சாலியமங்கலம் காட்டுவா பகுதியிலுள்ள வெண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணி மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லோடு வேனை சோதனையிட மறித்தனா். போலீஸாரை பாா்த்ததும் வேனில் வந்தவா்கள் வேனை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா்.

சோதனையில், அரசு அனுமதியின்றி வேனில் மணல் அள்ளப்பட்டு வந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, வேனை பறிமுதல் செய்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.