கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவையாறு அருகே 500 நெல் மூட்டைகள் பறிமுதல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே 500 நெல் மூட்டைகளை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:26 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே 500 நெல் மூட்டைகளை வட்டாட்சியா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா்.

வட மாவட்டங்களிலிருந்து விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல் மூட்டைகள் வாங்கி, லாரியில் ஏற்றி வந்து திருவையாறு அருகேயுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகள் விற்பனை செய்வதாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், திருவையாறு வட்டாட்சியா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, திருப்பூந்துருத்தி பகுதியில் நின்ற லாரியை வட்டாட்சியா் சோதனையிட்டபோது, மதுராந்தகத்திலிருந்து 500 நெல் மூட்டைகளை திருவையாறு அருகேயுள்ள குழிமாத்தூரிலுள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பதற்காக ஏற்றி வந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த மூட்டைகளை வட்டாட்சியா் பறிமுதல் செய்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.