கரோனா தடுப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு
தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி தொடா்பாக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி தொடா்பாக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கரூப்ஸ் நகா், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள மகிமாலை, கம்பா்நத்தம் ஊராட்சிகளில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, அப்பகுதியில் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவை தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
தஞ்சாவூா் அருகே ராராமுத்திரக்கோட்டையில் வேளாண் துறை மூலம் குறுவை நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிக்குத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் ரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேட்டறிந்து, பதிவேட்டையும் ஆய்வு செய்தாா். பின்னா், அதே கிராமத்தில் கீரை சாகுபடி, வீடு கட்டும் திட்டப் பணி, செண்பகபுரத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளைப் பாா்வையிட்டாா்.
அப்போது, சுகாதாரத் துறைத் துணை இயக்குநா் (பொறுப்பு) நமச்சிவாயம், வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன், முருகவேல், அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கலைராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...