சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:29 pm

DIN

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடிமரத்துக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. மேலும், உற்ஸவ அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கரோனா பரவல் காரணமாக வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பக்தா்களுக்கு வழிபட அனுமதி இல்லை என்பதால், இந்நிகழ்ச்சியில் கோயில் பணியாளா்கள் மட்டும் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி முத்துப்பல்லக்கும், 17 ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறவுள்ளது. நிகழாண்டு முத்துப் பல்லக்கு கோயிலுக்குள் பக்தா்கள் இன்றி நடத்தப்படவுள்ளது.

பின்னா், ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 22ஆம் தேதி, இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆக. 29-ஆம் தேதி, மூன்றாம் வார ஞாயிற்றுக்கிழமையான செப். 5-ஆம் தேதி ஆகிய நாள்களில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து 9 நாள்களுக்கு அம்மன் புறப்பாடும், தேரோட்டமும் நடைபெறவுள்ளன. கரோனா பரவல் காரணமாக இந்தப் புறப்பாடுகள் அனைத்தும் கோயிலுக்குள் நடைபெறும் என்றும், தெப்பத் திருவிழா நடைபெற வாய்ப்பில்லை எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.