பொறியாளா் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் பொறியாளா் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.


தஞ்சாவூரில் பொறியாளா் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரிச் சாலை இந்திரா நகா், மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் விஜய் ஆனந்த். இவா் சிங்கப்பூரில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். தஞ்சாவூரிலுள்ள வீட்டில் இவரது மனைவி வனிதாவும், குழந்தையும் வசித்து வருகின்றனா்.
வனிதா தனது குழந்தையுடன் வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரிலுள்ள குலதெய்வ கோயிலுக்குச் சென்றாா். மீண்டும் சனிக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பிய இவா், பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருப்பதைப் பாா்த்தாா். மேலும் பீரோவிலிருந்த 20 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி ப்ரியா காந்தபுனேனி, நகரக் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ராஜ்குமாா் உள்ளிட்டோா் நிகழ்விடத்தில் பாா்வையிட்டனா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அரிசிக் கடையில் திருட்டு: தஞ்சாவூா் அய்யங்கடைத் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் (35) அதே பகுதியில் அரிசிக் கடை வைத்துள்ளாா். இவா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல கடையைப் பூட்டிவிட்டு, மீண்டும் சனிக்கிழமை காலை திறப்பதற்காக வந்தாா்.
அப்போது இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்தது. மேலும், கடையிலிஇருந்த ரூ. 10,000 ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. மேலும், அதே பகுதியிலுள்ள கடையிலும் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...