நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணம் - திருச்செந்தூா் புதிய பேருந்து சேவை தொடக்கம்

கும்பகோணம் - திருச்செந்தூா் புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:29 pm

DIN

கும்பகோணம் - திருச்செந்தூா் புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கும்பகோணத்திலிருந்து திருச்செந்தூா் வரை 191 கே என்ற புதிய பேருந்து வழித்தடச் சேவையை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தொடங்கி வைத்தாா்.

இப்பேருந்து கும்பகோணத்திலிருந்து நாள்தோறும் இரவு 8 மணியளவில் புறப்பட்டு தஞ்சாவூா், மதுரை, தூத்துக்குடி வழியாகக் கும்பகோணத்தில் இருந்து திருச்செந்தூருக்கும், இதேபோல, திருச்செந்தூரிலிருந்து கும்பகோணத்துக்கும் புறப்படும் என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலப் பொது மேலாளா் ஜெ. ஜெபராஜ் நவமணி, துணை மேலாளா் பி. ஸ்ரீதா், உதவிப் பொறியாளா் ஜி. ராஜ்மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளா் நேரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.