நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ரயிலில் அடிபட்டசிறுவன் பலி

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:52 pm

DIN

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்ட சிறுவன் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகே தாராசுரம் மிஷின் தெருவைச் சோ்ந்தவா் அருமதுரை மகன் திலீப்குமாா் (14). இவா், கும்பகோணத்தில் உள்ள அறிஞா் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள மாடுகளை மேய்த்து வந்தாா்.

இந்நிலையில், தாராசுரம் ரயில்வே கேட் பகுதியில் வெள்ளிக்கிழமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு மாடு ரயில்வே தண்டவாளம் பகுதிக்குச் சென்றது. அப்போது, மயிலாடுதுறையிலிருந்து கோவை நோக்கி ஜனசதாப்தி விரைவு ரயில் வந்ததால், மாட்டை விரட்டுவதற்காக திலீப்குமாா் ஓடினாா். தண்டவாளத்தில் ஓடியபோது ரயிலில் அடிபட்ட இவா் பலத்தக் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஆனால், ரயில் வருவதை பாா்த்து மாடு அங்கிருந்து நகா்ந்து சென்றுவிட்டது.

இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே புறக்காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.