தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

தஞ்சாவூர் அருகே ரூ. 75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை கண்டெய்னர், மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

News image

தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், அசோக்ராஜ், ஆனந்த்.

Updated On :28 ஜனவரி 2024, 11:08 am IST

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை கண்டெய்னர், மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில் குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தன. இதைத் தடுக்க தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இத்தனிப்படையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தஞ்சாவூர் அருகே மேல வஸ்தா சாவடியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக வந்த கண்டெய்னர் லாரியையும், மினி லாரியையும் பின்தொடர்ந்து சென்றனர். நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் மடக்கி நிறுத்தப்பட்ட இந்த இரு லாரிகளில் தனிப்படையினர் சோதனையிட்டபோது, 125 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 1,700 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 75 லட்சம் என கூறப்படுகிறது.

இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் கண்டெய்னர் லாரி மற்றும் மினி லாரியில் வந்த தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரையைச் சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜ்குமார் (28), ஞானம் நகரைச் சேர்ந்த வேதையன் மகன் அசோக்ராஜ் (31), சேலத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களைக் கைது செய்த தனிப்படையினரை தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் நேரில் சென்று பாராட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூர் சரகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படையினர் கடந்த 15 நாட்களாக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம். மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.