யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தஞ்சாவூர் அருகே ரூ. 75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை கண்டெய்னர், மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

News image
தஞ்சாவூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மூட்டைகளுடன் கைது செய்யப்பட்ட ராஜ்குமார், அசோக்ராஜ், ஆனந்த்.
Updated On :7 டிசம்பர் 2021, 11:45 am

DIN

தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை கண்டெய்னர், மினி லாரிகளில் கடத்தி வரப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

டெல்டா மாவட்டங்களில் குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாகக் காவல் துறையினருக்குப் புகார்கள் வந்தன. இதைத் தடுக்க தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இத்தனிப்படையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தஞ்சாவூர் அருகே மேல வஸ்தா சாவடியில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படியாக வந்த கண்டெய்னர் லாரியையும், மினி லாரியையும் பின்தொடர்ந்து சென்றனர். நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலையில் மடக்கி நிறுத்தப்பட்ட இந்த இரு லாரிகளில் தனிப்படையினர் சோதனையிட்டபோது, 125 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 1,700 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 75 லட்சம் என கூறப்படுகிறது.

இவற்றைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் கண்டெய்னர் லாரி மற்றும் மினி லாரியில் வந்த தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரையைச் சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜ்குமார் (28), ஞானம் நகரைச் சேர்ந்த வேதையன் மகன் அசோக்ராஜ் (31), சேலத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களைக் கைது செய்த தனிப்படையினரை தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் பிரவேஷ்குமார் நேரில் சென்று பாராட்டினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:

தஞ்சாவூர் சரகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனிப்படையினர் கடந்த 15 நாட்களாக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் ரூ. 75 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளோம். மேலும் குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.