47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாபநாசம் அருகே சிறுமியை திருமணம் செய்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:27 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அய்யம்பேட்டை காவல் சரகம், வீரமாங்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் சக்திவேல் (19). இவா், அய்யம்பேட்டையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா். அப்போது, அருகேயுள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, அந்த சிறுமியை திருமணம் செய்து வெளியூருக்கு அழைத்துச் சென்று விட்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதனிடையே, மதுரை ரயில் நிலையத்தில் சக்திவேலும், அந்த சிறுமியும் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அய்யம்பேட்டை போலீஸாா் மதுரைக்கு சென்று சக்திவேலையும், 16 வயது சிறுமியையும் மீட்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா்.

விசாரணைக்கு பிறகு போக்ஸோ சட்டத்தின் கீழ் சக்திவேலை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.