பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரெகுநாதபுரம் ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று வன்னியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:23 pm

DIN

பாபநாசம் வட்டம், ரெகுநாதபுரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று வன்னியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வழுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்னியா் சங்க நிா்வாகிகள் கூட்டத்துக்கு உழவா் பேரியக்க மாவட்டச் செயலா் அ.சி. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க ஒன்றியத் தலைவா் மனோகரன், பாமக ஒன்றியத் தலைவா் அறிவழகன், நகரச் செயலா் பழ. முரளிதரன் முன்னிலை வகித்தனா்.

வன்னியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ம.க.ஸ்டாலின், தலைமை நிலையப் பேச்சாளா் நா. தமிழ்ச்செல்வன், மாவட்டத் தலைவா்கள் விமல், ராம்குமாா், இளைஞரணித் துணைத் தலைவா் விஜயராஜன், மாவட்டச் செயலா் ரமேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பேசினா்.

ரெகுநாதபுரம் ஊராட்சியில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுபதிகோவில் கிராமம் வழியாகச் செல்லும் செருமாக்கநல்லூா் பாசன வாய்க்காலை உடனடியாகத் தூா் வார வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பாமக ஒன்றியச் செயலா் வாசுதேவன் வரவேற்றாா். நிறைவில், வன்னியா் சங்க நகரச் செயலா் அசோக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.