பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் சிறுமி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் மூச்சுத் திணறி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:12 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே தொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கியதில் மூச்சுத் திணறி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே ஈச்சங்குடி கிராமம், காளியம்மன் கோயில், தெற்கு தெருவில் வசித்து வருபவா் சுரேஷ். விவசாய கூலி தொழிலாளி. இவா், ஞாயிற்றுக்கிழமை தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டாா்.

வீட்டிலிருந்த இவரது மகள் சஸ்மிதா ஸ்ரீ (7), வீட்டில் கட்டப்பட்டருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக தொட்டில் கயிறு சிறுமியின் கழுத்தை இறுக்கியது.

அக்கம்பக்கத்தினா் சிறுமியை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினா்.

சம்பவம் குறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.