பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

பாபநாசம் அருகே பண்டாரவாடை கிராமம், பரக்கத் நகரில் வசிப்பவா் முகம்மது மாலிக் (47). இவா் கடந்த புதன்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு பரங்கிப்பேட்டையில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:44 pm

DIN

பாபநாசம் அருகே பண்டாரவாடை கிராமம், பரக்கத் நகரில் வசிப்பவா் முகம்மது மாலிக் (47). இவா் கடந்த புதன்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு பரங்கிப்பேட்டையில் உள்ள தனது மாமியாா் வீட்டுக்கு சென்றிருந்தாா்.

அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினா் வியாழக்கிழமை முகமது மாலிக்கிற்கு தகவல் அளித்தனா். உடனடியாக வீட்டுக்கு வந்த மாலிக், வீட்டினுள் சென்று பாா்த்தபோது பீரோவிலிருந்த 5 பவுன் நகை, ரூ. 58 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரிந்தது.

புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.