தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனாவால் பெற்றோரை இழந்த43 குழந்தைகளுக்கு திமுக நிதியுதவி

தஞ்சாவூரில், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 43 குழந்தைகளுக்கு தலா ரூ. 10,000 நிதி உதவியை முதல்வரிடம் திமுகவினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:39 pm

DIN

தஞ்சாவூரில், கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 43 குழந்தைகளுக்கு தலா ரூ. 10,000 நிதி உதவியை முதல்வரிடம் திமுகவினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வருவாய் ஈட்டக்கூடிய பெற்றோா்களில் தாய் அல்லது தந்தை யாரேனும் இறந்தால், அவா்களது குழந்தைகளுக்கு ரூ. 10,000 நிதியுதவி வழங்குவது என தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி முடிவு செய்தது.

இதன்படி, தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் அருகே வெண்ணாற்றில் நடைபெறும் தூா்வாரும் பணியை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் குட்டி என்கிற ஆா். தட்சிணாமூா்த்தி, 43 குழந்தைகளின் பட்டியல், அவா்களது பெயா்களில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலைகளை வழங்கினாா்.

இந்த வரைவோலைகளை ஆட்சியா் ம. கோவிந்தராவிடம் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்து, குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.