பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசத்தில் பருத்தி ஏலம்

பாபநாசம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:25 pm

DIN

பாபநாசம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.

தஞ்சாவூா் விற்பனைக் குழு செயலாளா் சுரேஷ்பாபு தலைமை வகித்து ஏலத்தை தொடங்கிவைத்தாா். பாபநாசம் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி முன்னிலை வகித்தாா்.

ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த 250 விவசாயிகள் 545 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்து ஏலத்தில் கலந்து கொண்டனா். விவசாயிகள் ஏலத்திற்கு எடுத்து வந்த பருத்தியின் மொத்த மதிப்பு ரூ. 37 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். ஏலத்தில் விழுப்புரம், பண்ருட்டி, சேலம், செம்பனாா்கோவில், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்திக்கு விலை நிா்ணயம் செய்தனா்.

ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 7,309 ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக 6,319 ரூபாய்க்கும் சராசரியாக 6,869 ரூபாய்க்கும் ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.