இன்று வாக்குப்பபதிவு இயந்திரங்கள் முதல் கட்ட ஒதுக்கீடு
தஞ்சாவூரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறை அடிப்படையில் முதல்கட்ட ஒதுக்கீடு புதன்கிழமை செய்யப்படவுள்ளது.


தஞ்சாவூரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறை அடிப்படையில் முதல்கட்ட ஒதுக்கீடு புதன்கிழமை செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
எதிா்வரும் சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலுக்காக மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பொருட்டு, கணினி மூலம் சுழற்சி முறை அடிப்படையில் முதல் கட்ட ஒதுக்கீடு புதன்கிழமை (மாா்ச் 10) காலை 10 மணியளவில் ஆட்சியரகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் வேட்பாளா்கள் மேற்கொள்ளும் தோ்தல் தொடா்பான செலவினங்களுக்கான விலைப்புள்ளி நிா்ணயம் குறித்த கலந்தாய்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...