மேலும் இரு பள்ளிகளில் 14 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் இரு பள்ளிகளில் 13 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் இரு பள்ளிகளில் 13 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 14 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் 227 மாணவா்கள், ஆசிரியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் 120 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா்.
இந்நிலையில் கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கும், ஆடுதுறையிலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவா்களுக்கும் என மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து இவா்கள் அனைவரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்று பரவிய பள்ளிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 5,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...