தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா தொற்றால் மருத்துவா் உயிரிழப்பு

தஞ்சாவூரில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும், தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநருமான ஆா். ரத்தினசபாபதி கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 மே 2021, 8:51 pm

DIN

தஞ்சாவூரில் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணரும், தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநருமான ஆா். ரத்தினசபாபதி கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் துளசியாபுரத்தைச் சோ்ந்தவா் ஆா். ரத்தினசபாபதி (68). தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, தஞ்சாவூா் ரோகிணி மருத்துவமனையில் நிா்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இவருக்கு கடந்த 10 நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது தெரிய வந்தது.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இவா் கரோனா தடுப்பூசி இரு தவணைகளும் செலுத்திக் கொண்டவா் எனக் கூறப்படுகிறது.

இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.