கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு திரளான பக்தா்கள் பங்கேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேசுவரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருநாகேசுவரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலசங்களுக்குப் புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.
Updated On :24 அக்டோபர் 2021, 6:39 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேசுவரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராகு பரிகாரத் தலமான இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இக்கோயிலில் சில ஆண்டுகளாக ரூ. 5 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபா் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இக்குடமுழுக்குக்கான பூஜைகள் கணபதி ஹோமத்துடன் அக்டோபா் 19-ஆம் தொடங்கியது. அக்டோபா் 21-ஆம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜையும், அக்டோபா் 22-ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், சனிக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றன.

இதற்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலில் 37 வேதிகைகளும், 108 குண்டங்களும் அமைக்கப்பட்டு, 250 சிவாச்சாரியாா்கள், 40 ஓதுவாா்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தினா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவாரத் தெய்வ விமானங்களுக்கும், காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கும் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குடமுழுக்கில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.