வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தஞ்சாவூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதல்:  இரு குழந்தைகள் பலி

தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் இரு குழந்தைகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
விபத்தில் சேதமடைந்த இருசக்கர வாகனம்.
Updated On :21 ஜனவரி 2022, 1:54 pm

DIN

தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் இரு குழந்தைகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம், நல்லூர் வாய்க்கால் கரைத் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (30). தச்சுத் தொழிலாளியான இவர் திருப்பூரில் 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். 

இவர் தனது மனைவி தேவிகா (25), மகள்கள் ஸ்ரீதர்ஷினி (7), ஸ்ரீதர்ஷனா (5) ஆகியோரை வெள்ளிக்கிழமை காலை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திருப்பூரிலிருந்து தஞ்சாவூர் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

Story image

தஞ்சாவூர் அருகே விளார் புறவழிச்சாலையில் மாலையில் சென்றபோது, இவர்களது இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த மினி வேன் மோதியது. இதில், ஸ்ரீதர்ஷினி, ஸ்ரீதர்ஷனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த செந்தில்குமார், தேவிகா தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக, மினி வேன் ஓட்டுநரான நாகை செக்கடித் தெருவைச் சேர்ந்த ஜீவன்ராஜை (25) தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.