புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பட்டுக்கோட்டை நகராட்சி துணைத் தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு

பட்டுக்கோட்டை நகராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:27 pm

DIN

பட்டுக்கோட்டை நகராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நகராட்சியில் பேரூராட்சித் துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 33 வாா்டுகளில் குறைந்தபட்சம் 17 வாா்டுகளின் உறுப்பினா்கள் தோ்தல் பங்கேற்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ள நிலையில், 13 அதிமுக உறுப்பினா்கள், 2 சுயேச்சைகள் மட்டுமே வந்தனா்.

திமுக உறுப்பினா்கள் யாரும் துணைத் தலைவா் தோ்தலுக்கான மறைமுகத் தோ்தலில் பங்கேற்கவில்லை. துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளா் தோ்வில் திமுக உறுப்பினா்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், அவா்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து போதியளவு உறுப்பினா்கள் இல்லை என்ற அடிப்படையில், பட்டுக்கோட்டை நகராட்சித் துணைத் தலைவா் பதவிக்கானதோ்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.