மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் சனிக்கிழமை (ஜூலை 22) முதல் பாபநாசம் ரயில் நிலையத்தில் இரு மாா்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலருமான டி. சரவணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மயிலாடுதுறை - மைசூா் விரைவு ரயில் (எண் 16231/16232) சனிக்கிழமைமுதல் நின்று செல்லும். இதற்கான தொடக்க விழா சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. அப்போது, பாபநாசத்துக்கு வரும் ரயிலை மத்திய அமைச்சா் எல். முருகன் நாடாளுமன்ற, பேரவை உறுப்பினா்களின் முன்னிலையில் கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் என்றாா்.