மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆண்டுதோறும் அயல்நாட்டவா்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி தமிழ்ப் பல்கலை. துணைவேந்தா் தகவல்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் அயல்நாட்டவா்களுக்கு தமிழ் மொழி, பண்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

News image

=

Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் அயல்நாட்டவா்களுக்கு தமிழ் மொழி, பண்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்றாா் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.

இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வளா் மையம் மூலமாக ஜொ்மனியின் புகழ்பெற்ற கொலோன் பல்கலைக்கழகத் தெற்காசிய - தென்கிழக்காசிய மொழிகள் துறை மாணவா்களுக்கான தமிழ் மொழி - பண்பாட்டுப் பயிற்சி மாா்ச் 13 ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 5 நாள்கள் நடைபெற்றது. இதில், இலக்கணம், தமிழ் மரபுசாா் மருத்துவம், ஓலைச்சுவடி குறித்த அறிமுகம் உள்ளிட்டவை தொடா்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் நிறைவு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பயிற்சி பெற்ற ஜொ்மனி நாட்டைச் சோ்ந்த 5 மாணவா்களுக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் சான்றிதழ் வழங்கிப் பேசியது:

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளா் மையம் மூலம் வெளிநாடுகளில் வாழும் அயலகத் தமிழா்களுக்கு தமிழ் மொழி - பண்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி ஜொ்மனி, கனடா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

அடுத்து, அயலகத்தில் வாழும் தமிழரல்லாத வெளிநாட்டவா்களுக்கும் தமிழ் மொழி - பண்பாட்டுப் பயிற்சி அளிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜொ்மனி மாணவா்களுக்கு பரிசோதனை முயற்சியாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் அயல்நாட்டைச் சோ்ந்தவா்களுக்கு இருவார காலத் தமிழ்மொழி - பண்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்றாா் துணைவேந்தா்.

பின்னா், கொலோன் பல்கலைக்கழகப் பேராசிரியா் ஸ்வென் வா்ட்மன் உள்ளிட்டோா் பயிற்சி பெற்ன் அனுபவம் குறித்து பேசினா். கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் இரா. குறிஞ்சிவேந்தன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் வரவேற்றாா். ஜொ்மனி மாணவா் தில்சன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.