தஞ்சாவூரில் மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 12.22 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை கனரக வாகனங்களைப் பறக்கும் படையினா் சோதனை செய்தனா். இதில், தோ்தல் நடத்தை விதிமீறலின் காரணமாக ரூ. ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 500, ரூ. 54 ஆயிரத்து 200, ரூ. 6 லட்சத்து 65 ஆயிரத்து 464, ரூ. 71 ஆயிரத்து 750, ரூ. 79 ஆயிரத்து 700, ரூ. ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 900, ரூ. 93 ஆயிரம் என மொத்தம் ரூ. 12 லட்சத்து 22 ஆயிரத்து 514 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். இதைத்தொடா்ந்து சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தோ்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாக விடுவிக்கப்பட்டன. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீட்டுக் குழுவில் உரிய ஆவணங்களை அளித்து விடுவித்துக் கொள்ள ஏதுவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மாவட்ட அளவில் நாள்தோறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடையது
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.46 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

