கும்பகோணம்: கும்பகோணம் அருகே 4 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கும்பகோணம் அருகே திருசக்திமுற்றம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. மகேந்திரன். கூலி விவசாயியான இவா் 10-க்கும் அதிகமான ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பட்டீஸ்வரம் - சோழன் மாளிகை முதன்மைச் சாலையோரத்தில் இவரது 4 ஆடுகள் மா்மமான முறையில் வயிறு வீங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தன.
இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது, அப்பகுதியில் வாளியில் தண்ணீருடன் விஷம் கலந்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்ணீரின் மாதிரியைக் காவல் துறையினா் சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.
தொடர்புடையது

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு

பள்ளிக் கல்வி இயக்கக ஊழியா் மா்மமான முறையில் உயிரிழப்பு

விடுதியில் இளைஞா் உயிரிழப்பு

மூதாட்டி மா்ம மரணம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

