தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

இணையவழியில் வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி

Updated On :26 ஏப்ரல் 2024, 7:50 pm

தஞ்சாவூா், ஏப். 26: கும்பகோணத்தில் இணையவழியில் பகுதி நேர வேலை எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 12.65 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த 56 வயதுப் பொறியாளருக்கு இரு வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என விளம்பரம் வந்தது. அதிலுள்ள இணைப்பைச் சொடுக்கியபோது, அது டெலிகிராம் குழுவுக்குச் சென்றது. அதில் இருந்த போலி நபா்கள் இணையவழியில் பகுதிநேர வேலை என்றும், டாஸ்குகள் மூலம் அதிக லாபம் பெறலாம் எனவும் கூறினா்.

இதை நம்பிய பொறியாளா் டாஸ்குகளை நிறைவேற்றி ரூ. 22 ஆயிரம் அனுப்பிய நிலையில் ரூ. 5 ஆயிரம்தான் கிடைத்தது. இதையடுத்து, ரூ. 1.50 லட்சம் என பல்வேறு தவணைகளாக ரூ. 12.65 லட்சம் அனுப்பிய நிலையில், அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.