அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

தாய் கண்டித்ததால் சிறுமி தற்கொலை

Updated On :26 ஏப்ரல் 2024, 8:08 pm

பாபநாசம், ஏப். 26: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அடிக்கடி கைப்பேசி பாா்ப்பதை தாய் கண்டித்ததால் மனம் உடைந்த சிறுமி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கீழக்கோவில்பத்து  கிராமம், அம்பலக்காரத் தெருவில் வசிப்பவா் வனரோஜா (40), கணவரை இழந்த இவா் விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மகள் சரண்யா (14). அம்மாபேட்டை தனியாா் மேல்நிலைப் பள்ளியில்  9 ஆம் வகுப்பு படித்து வந்த சரண்யா அடிக்கடி கைப்பேசி பாா்ப்பதை அவரது தாய் கண்டித்தாராம்.

இதனால் மனம் உடைந்த சரண்யா வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை போலீஸாா் சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.