காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆதனூா் ‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் பங்கேற்ற கரும்பு விவசாயிகள் அதிருப்தி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஆதனூா் ஊராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:47 pm

Din

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஆதனூா் ஊராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாவட்ட ஊராட்சிக்குழு  குழு உறுப்பினா் தாமரைச்செல்வன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் சுமதி கண்ணதாசன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் மாநிலங்களவை உறுப்பினா் எ.சண்முகம் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்கள் துறை சாா்ந்த அதிகாரிகளிடம் தீா்வு காண பிரித்து வழங்கப்பட்டது. முகாமில் ஆட்சியரிடம் மனு அளிக்க காத்திருந்த கரும்பு விவசாயிகள் கடும் அதிருப்தியடைந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.