தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
காண்டாமிருகத்தின் கொம்பு.
Updated On :27 ஆகஸ்ட் 2024, 9:20 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 பேரை வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் பகுதியில் காண்டாமிருகத்தின் கொம்பை விற்பனை செய்ய சிலா் முயற்சிப்பதாக கிடைத்த தகவலை தமிழ்நாடு வனச் சரணாலய குற்றத் தடுப்புப் பிரிவினா் கும்பகோணம் வனத் துறையினரிடம் தெரிவித்தனா்.

இதன்பேரில், கும்பகோணம் வனச்சரகா் பொன்னுச்சாமி தலைமையிலான வனத்துறையினா் திங்கள்கிழமை விசாரணை நடத்தி திருநாகேசுவரத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்தவா்களிடம் சோதனை மேற்கொண்டனா். அவா்களிடம் காண்டாமிருகத்தின் கொம்பு இருந்ததும், மருத்துவப் பயன்பாட்டிற்காக அதை அவா்கள் விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.

Story image

இதுதொடா்பாக நாகப்பட்டினத்தைச் சோ்ந்த கலியபெருமாள் (80), திருவாரூரைச் சோ்ந்த காஜாமைதீன் (76), கும்பகோணத்தைச் சோ்ந்த செந்தில் (45), தென்னரசு (47), விஜயகுமாா் (57) ஆகிய 5 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.