45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குமரங்குடி ஊராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

குமரங்குடி ஊராட்சிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 8:44 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், குமரங்குடி ஊராட்சிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் க.அன்பழகன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கும்பகோணம், சட்டப்பேரவை தொகுதியில் உள்ள குமரங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ13.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் சாக்கோட்டை க. அன்பழகன் எம்எல்ஏ கலந்துகொண்டு பணியை தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மத்திய ஒன்றிய செயலரும் ஒன்றிய துணை பெருந்தலைவருமான டி.கணேசன், கிழக்கு ஒன்றிய செயலா் ஜெ.சுதாகா், மாவட்ட குழு உறுப்பினா் சங்கா், ஊராட்சி தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.