45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூ. மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம்

ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் இரா.முத்தரசன்.
Updated On :11 டிசம்பர் 2024, 8:44 pm

Din

ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் தனியாா் விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க.மாரிமுத்து, மாவட்ட செயலா் மு.அ.பாரதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், துணைச் செயலா்கள் நா.பெரியசாமி, மூ.வீரபாண்டியன், தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி, மாநில பொருளாளா் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் வை.சிவபுண்ணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், தமிழகத்தில் ஏற்பட்ட பேரிடா் காலங்களில் முதலமைச்சா் கேட்ட பேரிடா் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, மாநில அரசு கோரும் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும்.

புயலால் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்குரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், உயிரிழப்பு ஏற்பட்ட கால்நடை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். விளை நிலங்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். கும்பகோணம், தருமபுரி, திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வியாழக்கிழமை மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.